தர்மபுரி: தர்மபுரி அடுத்த செக்கோடியில், குடியிருப்பு பகுதியில் தேங்கும் மழைநீரால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தர்மபுரி அடுத்த செக்கோடியில், ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்பு அருகே, ஒரு குட்டை உள்ளது. மழை பெய்யும் நேரத்தில், இந்த குட்டையில் மழைநீர் தேங்குவது வழக்கம். தற்போது, அடுத்தடுத்து வந்த புயல் மழையால், இக்குட்டையில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதைச்சுற்றி முட்செடிகள் வளர்ந்து, புதராக மாறியுள்ளது. பலநாட்களாக தண்ணீர் தேங்குவதால், இதில் அதிகளவில் கொசு உற்பத்தியாகிறது. மேலும், இதிலிருந்து வரும் விஷ ஜந்துக்கள், அருகிலுள்ள குடியிருப்புகளில் புகுகிறது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தேங்கிய நீரை அகற்றவும், இதில் கொசு மற்றும் விஷ பூச்சிகள் உருவாகாதவாறு மருந்து தெளிக்கவும், செக்கோடி பஞ்., நிர்வாகத்துக்கு பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்தும் பயனில்லை. எனவே, இவர்களின் நலன்கருதி, இந்த குட்டையை தூய்மைப் படுத்தி, மருந்து தெளிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE