நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு, போலீசார் அறிவுரை வழங்கினர்,
நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று காலை முதல், மாலை வரை முககவசம் அணியாமல், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்த, 220 பேர், 17 இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு, கொரோனா தொற்று பரவாமல் தற்காத்து கொள்வதற்காக, முக கவசம் அணிய வேண்டும். கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறிவுரைகளை, போலீசார் வழங்கினர். 'கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, பொதுமக்கள் விதிமுறைகளை கடைப்பிடித்து, தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதுடன், தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் தற்காத்து கொள்ள வேண்டும்' என, நாமக்கல் எஸ்.பி., சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE