நாமக்கல்: மார்கழி மாத, முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, பல்வேறு அபி ?ஷகங்கள் நடந்தன.
நாமக்கல் ஆஞ்சநேயர், 18 அடி உயரத்தில் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சனி பகவானின் தாக்கத்தை குறைக்கும் வகையில், ஒவ்வொரு தமிழ் மாதமும், முதல் ஞாயிற்றுக்கிழமையன்று, ஆஞ்சநேயருக்கு அபி ?ஷகம், பூஜைகள் நடைபெறும். அதேபோல், நேற்று மார்கழி முதல் ஞாயிறை முன்னிட்டு காலை, 10:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடந்தது. 11:00 மணிக்கு நல்லெண்ணெய், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபி ?ஷகம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்களுக்கு வெப்பநிலை அறியப்படும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டும், கிருமிநாசினி தெளிக்கப்பட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்ததால், கோவிலுக்குள் வராமல் கேட்டிற்கு வெளியிலேயே காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE