கரூர்: கேரளா மாநிலம் உள்ளிட்ட, நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அமராவதி அணைக்கு வரும், தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டையில் உள்ள, அமராவதி அணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 1,638 கன அடி தண்ணீர் வந்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, வினாடிக்கு, 1,670 கன அடியாக அதிகரித்தது. இதனால் அமராவதி ஆற்றில், 1,625 கன அடி, புதிய வாய்க்காலில், 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 89.67 அடியாக இருந்தது. அமராவதி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரூர் அருகே உள்ள, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியுள்ளது.
* கரூர் அருகே உள்ள மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 6,023 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில், 5,453 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 570 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள் ளது.
* கார்வாழி ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு, நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 64 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.94 அடியாக இருந்தது. இந்நிலையில், நொய்யல் வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர், தற்காலிகமாக நேற்று நிறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE