கரூர்: கரூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. 12 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். எந்த அறிகுறியும் இல்லாமல் தொற்று உள்ளவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். 10 பேர் தொற்று குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில், 5,058 பேர் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், 4,909 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 48 பேர் இறந்துள்ளனர். தற்போது, 101 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE