கரூர்: க.பரமத்தி அருகே, தொழிலாளி வீட்டில், தங்க நகையை மர்ம மனிதர்கள் திருடி சென்றனர். கரூர் மாவட்டம், க.பரமத்தி அம்மன் நகரை சேர்ந்தவர் குணசேகரன், 47; பர்னிச்சர் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 19ல் மதியம், குணசேகரனின் வீட்டுக்குள் புகுந்த, மர்ம மனிதர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த, ஏழு பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து, குணசேகரன் போலீசில் புகார் செய்தார். க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE