சென்னை :பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதம்:
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இம்மாதத்தின் முதல் நாளில் போராடத் துவங்கியதில் இருந்து நம் வலிமை வெளிப்பட்டு வருகிறது. அரசின் காதுகளில் இன்னும் சத்தமாக விழுமாறு டிச. 23ல் தமிழகம் முழுவதும் உள்ள 528 பேரூராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தி மனு கொடுக்க உள்ளோம். நம் கோரிக்கையை உடனே தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE