திருநெல்வேலி : அமைச்சர் செல்லுார் ராஜூக்கு கத்தியை காட்டி மிரட்டி வீடியோ வெளியிட்ட மூன்று சிறுவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
அமைச்சர் செல்லுார் ராஜூ, மதுரையில் நடந்த விழாவில், தி.மு.க.,தலைவர் ஸ்டாலினை விமர்சிக்கும்போது ஒரு ஜாதியை குறிப்பிட்டு பேசினார். இதற்கு குறிப்பிட்ட சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் செல்லுார் ராஜூ தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த மூன்று சிறுவர்கள், செல்லுார் ராஜூ பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுவதோடு, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டனர்.சங்கரன்கோவில் போலீசார், சிறுவர்கள் மூவர் மீதும் பெயர் குறிப்பிடாமல் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE