கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப் படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், மழை நீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. இதனை ஒட்டி, இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.மழைநீர் வடிகாலை ஒட்டி போதிய இடமில்லாமல் கடைகள் கட்டப்பட்டுள்ளது. கடைகளுக்கு வருபவர்கள், சர்வீஸ் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி கடைகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், அரசு அலுவலங்களுக்கும், பொதுமக்கள் வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தி வருகின்றனர். கடைகளுக்கு பொருட்கள் ஏற்றிய வரும் லாரி, டெம்போ போன்ற வாகனங்களும் ரோட்டில் நிறுத்தப்படுகின்றன.
இதனால், சர்வீஸ் ரோட்டில், காலை, 9:00 முதல் இரவு, 9:00 மணி வரை வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. மேலும், சர்வீஸ் ரோட்டில் எதிரே வாகனங்கள் வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. நடைபாதையில் கடைக்காரர்களின் போர்டுகள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது; விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இதனை தவிர்க்க, சர்வீஸ் ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதையும், நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடை களின் போர்டுகள் மற்றும் கடைகளை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE