பொள்ளாச்சி : பொள்ளாச்சி போலீஸ் குடியிருப்பு பகுதி அருகே, போலீஸ் திருமண மண்டபம் உள்ளது. மண்டபம் அருகே குடியிருப்பு பகுதிகளும் உள்ளன.
இந்நிலையில், மண்டபத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதாரம் பாதிக்கிறது.மக்கள் கூறுகையில், ''போலீஸ் திருமண மண்டபம் தற்போது வாடகைக்கு விடப்படவில்லை. ஆயுதப்படை போலீசார் தங்கியுள்ளனர். மண்டபத்தில் இருந்து கழிவுநீர் வெளியேற்ற குழாய் பொருத்தப்பட்டுள்ளது.திறந்த வெளியில் செல்லும் கழிவு நீர், ரோட்டில் வெள்ளமாக ஓடுகிறது. இதனால், சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கிறது. மேலும், கடும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்வோர், அவதிப்படுகின்றனர். போலீசார் இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்,'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE