பொள்ளாச்சி : பொள்ளாச்சி, நெல்லித்துறை மன்னம் மக்கள், சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.அதில், 'கிராமத்தில், இரவாலர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள்; விவசாய கூலி வேலைக்கு சென்று வருகிறோம். இப்பகுதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் படிக்கின்றனர்.கிராமத்தில் பொது பயன்பாட்டுக்காக உள்ள இடத்தில், விளையாட்டு பூங்காவும், மகாத்மா காந்தி மாலை நேர கல்வி மையம் அமைக்க விரும்புகின்றனர். எனவே, இடத்துக்குரிய அனுமதி வழங்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE