வால்பாறை : வால்பாறை, வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் அபிலாஷ், 26. இவர், பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
வால்பாறையில் இருந்து, பொள்ளாச்சிக்கு நேற்று பைக்கில் சென்ற போது, வாட்டர்பால்ஸ் எஸ்டேட் முதல்பிரிவு அருகே உள்ள பாலத்தில், எதிரே வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே அபிலாஷ் பலியானார். விபத்து குறித்து, காடம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE