உடுமலை : குடிமங்கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், வீதம்பட்டி ஊராட்சியில், கையெழுத்து இயக்கம் மற்றும் கிராம சபா கூட்டம் நடந்தது.
ஒன்றிய பொறுப்பாளர் கிரி தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ராஜ மாணிக்கம் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், வீதம்பட்டி கிராம பெண்களிடம், ஊராட்சியில் நிலவும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தனர். வீதம்பட்டி மகளிர் சுகாதார வளாகத்தை இரண்டு முறை பராமரிப்பு செய்தும், திறக்காமல், உள்ளனர்.பொம்மநாயக்கன்பட்டியில், மயானபாதை பராமரிப்பு, தெருவிளக்கு பழுது, கழிப்பிட வசதி இல்லாதது உட்பட பல்வேறு பிரச்னைகளை பெண்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அ.தி.மு.க., ஆட்சிக்கு எதிராக பெரிய பதாகையில், கையெழுத்து பெறப்பட்டது. ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE