அன்னுார், : உதவித்தொகைக்காக ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் முதியோர் அவதிப்படுகின்றனர்.
உழைக்கும் திறனற்ற, வருமானம் இல்லாத, முதியோருக்கு, மாதாந்திர உதவித் தொகையாக, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அன்னுார் தாலுகாவில், 7,000 பேர் மாதாந்திர உதவித்தொகை பெற்று வருகின்றனர். இந்நிலையில், முதியோர் உதவித் தொகைக்காக, இனி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து கோவில்பாளையம், அண்ணா நகர் முதியோர்கள் கூறியதாவது:முதியோர் உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் தாலுக்கா அலுவலங்களிலும் நேரடியாக பெறப்பட மாட்டாது என அரசு தெரிவித்துள்ளது.
முதியோர் உதவித்தொகை கோரி, பொது சேவை மையங்களில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும்போது மொபைல் நம்பர் கேட்கின்றனர். அந்த மொபைலுக்கு ஓ.டி.பி., வரும். அதை திரும்ப தெரிவிக்க வேண்டும், என்கின்றனர்.எந்த வருமானமும் இல்லாமல், உணவுக்கு வழியில்லாமல், முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கிறோம். இந்த ஆன்லைன் நடைமுறை மிகவும் சிரமமாக இருக்கிறது.எனவே, வழக்கம்போல் முதியோர் உதவிக்கான விண்ணப்பத்தை எழுதி ஆவணங்களை இணைத்து கொடுத்தால் போதுமானது என மாற்றம் செய்ய வேண்டும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE