கோவை : கோவை கிழக்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியம் கண்ணம்பாளையம் பேரூராட்சி, தி.மு.க., சார்பில், ஒருங்கிணைந்த கிராம சபை கூட்டம் நடந்தது.
பேரூராட்சி வ.உ.சி., நகர் மைதானத்தில், 11, 12வது வார்டுகள் கிளை சார்பில், நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, கண்ணம்பாளையம் பேரூராட்சி தி.மு.க., பொறுப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார். பட்டணம் பேரூராட்சி தலைவர் கோமதி மற்றும்செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணியை சேர்ந்தவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE