கோவை : கோவை மாவட்டத்தில், தேசிய திறனாய்வு தேர்வு எழுத, 6 ஆயிரத்து 983 மாணவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுக்க, தேசிய திறனாய்வு தேர்வு வரும், 27ம் தேதி நடக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பங்கேற்கும் இத்தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில், மட்டுமே நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்றால், ஆய்வு படிப்புகள் வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.இத்தேர்வில் பங்கேற்க கோவை மாவட்டத்தில், 6 ஆயிரத்து 983 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அனுமதிச்சீட்டு விநியோகிக்கப்பட்டது.மொத்தம் 71 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு முந்தைய நாளே, அறைகள் முழுக்க, கிருமிநாசினி தெளித்து, வளாகத்தை சுத்தப்படுத்தஉத்தரவிடப்பட்டுள்ளது.மனத்தேர்வு, படிப்பறிவு தேர்வு என இரு பிரிவுகளாக நடத்தப்படும் இத்தேர்வு, மதியம் 1:30 மணி வரை நடக்கிறது. கண்காணிப்பு பணிகளில், ஆயிரத்து 200 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE