முதுகுளத்துார் : முதுகுளத்துார் பேரூராட்சி அலுவலகம் அருகே பா.ம.க., சார்பில் வன்னியர் சமுதாயத்திற்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் பாலமுருகன்,ஊராட்சி தலைவர் இந்துமதிபாலமுருகன் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் ராஜ்குமார்,மாவட்ட செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர்.கோரிக்கை மனுவை பேரூராட்சி அலுவலகத்தில் வழங்கினர்.இதேபோன்று கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட மாணவரணி செயலாளர் பிரவீன்ராஜ்,துணை செயலாளர் ராஜேந்திரன்,ஒன்றிய தலைவர் பூமிநாதன் உட்பட கட்சி நிர்வாகிகள் கோரிக்கை மனுவை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE