புதுடில்லி:பிரதமரின் 'கிசான்' திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தலா, 2000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளாக ஆண்டுக்கு, 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம், விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இந்த ஆண்டின் மூன்றாவது தவணையாக, ஒன்பது கோடி விவசாயிகளுக்கு, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட உள்ளது.உதவித்தொகை வழங்கும் பணிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.அப்போது,ஆறு மாநில விவசாயிகளுடன் அவர்பேசுகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE