அவிநாசி : அவிநாசி அருகே தெக்கலுார் வார்டு ஒன்றிய கவுன்சிலர் மகன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தெக்கலுார் ஊராட்சி, வெள்ளாண்டிபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. விசைத்தறி நடத்தி வருகிறார். இவரின் மனைவி சித்ரகலா. அப்பகுதி அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர். இவர்களுக்கு கோகுல பிரசாந்த், 24, கிருத்திகா, 21 என இரு குழந்தைகள். கோகுல பிரசாந்த், சென்னையிலுள்ள தனியார் இன்ஸ்டியூட்டில், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படித்து வந்தார்.கடந்த மாதம் நடந்த முதல்கட்ட தேர்வில், அவர் தோல்வியடைந்தார். இதனால், மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று முன்தினம் விஷம் குடித்து விட்டார். இதையறிந்தபெற்றோர், கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE