திருப்பூர் : திருப்பூரில் கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர், காசிபாளையம் ரோட்டை சேர்ந்தவர் சரத் ராகவ், 19; சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் சி.ஏ., படித்து வந்தார். கொரோனா காரணமாக, திருப்பூரில் இருந்தபடி, 'ஆன்லைன்' வகுப்பில் படித்து வந்தார்.ஏற்கனவே, ஒரு முறை எழுதிய தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தார். சமீபத்தில், மீண்டும் தேர்வு எழுதியிருந்தார். தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், வீட்டில் இருந்த சரத் ராகவ் நேற்று முன்தினம் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE