திருப்பூர் : ஆட்சிமொழி சட்ட வாரத்தின் முதல் நிகழ்ச்சியாக, விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
ஆட்சிமொழி சட்டம், 1956ம் ஆண்டு டிச., 27 ல் நிறைவேற்றப்பட்டது. சட்டத்தை நினைவு கூறும் வகையில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், நேற்று துவங்கி, 29 ம் தேதி வரை, ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது.முதல் நாளான நேற்று, திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை, திருப்பூர் முத்தமிழ் சங்கத்துடன் இணைந்து, ஆட்சிமொழி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.மக்கள் மாமன்றம், தமிழ்நாடு தமிழ் சங்கம் உள்ளிட்ட அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம், எல்.ஆர்.ஜி., கல்லுாரி அருகே நிறைவு பெற்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE