வேடசந்துார் : ஜிலியம்பாறை ஒன்றியம் வாணிக்கரையை சேர்ந்தவர்மணிகண்டன் 45. கூலி தொழிலாளி.
இவரது மகள் திவ்யா 20. ரெங்கநாதபுரம் அருகே தனியார் நுாற்பாலையில் பணிக்கு சென்றார். ஒப்பந்த பணியில் இருந்த அசாம்மாநிலத்தை சேர்ந்த அம்ஜான்கானுடன் 27, ஏற்பட்ட பழக்கம்நெருக்கமானது.நேற்று முன்தினம் வீட்டை விட்டு புறப்பட்ட திவ்யா, அசாம் மாநில காதலனுடன் ரயிலில் ஏறி அசாம் சென்றுள்ளார். திவ்யாவின் தந்தை மணிகண்டன் கூம்பூர் போலீசில் புகார் கொடுத்தார். கூம்பூர் எஸ்.ஐ.,வேல்ராஜ் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE