சிவகங்கை : சத்துணவு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்டத்தலைவர் கண்ணுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சீமைச்சாமி, மாநில துணைத்தலைவர் பாண்டி, அரசு ஊழியர்கள் சங்க வட்ட கிளைத்தலைவர் முத்தையா,மாவட்டத்துணைத்தலைவர் தமிழரசன்,மாநில துணைத்தலைவர் ஓய்வு மெய்யப்பன், ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், ஐ.சி.டி.எஸ்., ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் வாசுகி, சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்டத்துணைத்தலைவர் பழனிசாமி, பொருளாளர் பானுமதி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சத்துணவு மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊழியர்களுக்கு காலமுறை ஊதியத்தில் குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE