தேவாரம் : தேவாரம் பேரூராட்சி 1வது வார்டு மூணாண்டிபட்டியில் குண்டும், குழியுமான ரோடு, சேதமடைந்த சமுதாய கூடம், சாக்கடை கழிவுநீர் தேக்கம், அகற்றப்படாத குப்பை உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
மூணாண்டிபட்டியில் 800 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மெயின் ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்களில் செல்ல சிரமப்படுகின்றனர். ஜெ.,நகரில் சமுதாயக்கூடம் பயன்பாடின்றி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மின்சாதனங்கள் பழுதடைந்துள்ளது. பகலில் குப்பை கொட்டும் பகுதியாகவும், இரவில் வளாகம் மது அருந்துதல் போனற சsமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தெருக்களில் சில கம்பங்களில் மின்விளக்கு இன்றி இரவில் இருள் சூழ்ந்துள்ளது.
மக்கள் கூறுவது என்ன:சுகாதாரக்கேடுஜெயக்குமார் :ஜெ.,நகர் மெயின் ரோட்டில் சமுதாய கூடம் சிமென்ட் கோடவுனாக பயன்படுத்தி வருவதால் கட்டடம் முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனை சுற்றி கழிவுப்பொருட்கள், சாக்கடை கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மக்கள் திருமணம், காதணி உள்ளிட்ட விசேஷங்களை நடத்ததனியார் மண்டபங்களை நாடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. தெருக்களில் சாக்கடை துார்வாராததால் கழிவுநீர் வீடுகளுக்கு முன் தேங்கி கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. சமுதாய கூடத்தைமக்கள்பயன்பாட்டிற்கு கொண்டுவந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஆபத்தான ஓடை பாலம்குமரேசன்:மூணாண்டிபட்டி செல்லும் ரோட்டில் பெரம்புகட்டி ஓடை பாலத்தின்அடிப்பகுதி அரிப்பு ஏற்பட்டுஇருபுறமும் தடுப்புச்சுவர் முழுவதும் சேதமடைந்துள்ளது.வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். புதிதாக தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். குழாய்களில் திருகு இல்லாமல்குடிநீர் வீணாக ரோட்டில் செல்கிறது.பல இடங்களில் சிறுவர்கள் தொடும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ள மின்பெட்டிகளை மாற்றி அமைக்க வேண்டும். ரோடு, சிறுபால தடுப்புச்சுவர் அமைத்து, சமுதாயக்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE