போடி : போடி அருகே மீனாட்சியம்மன் கண்மாய் ஏலம் எடுப்பதில் பிரச்னை இருந்து வந்ததையொட்டி அங்கு மீன்களை பிடிக்க கூடாது என தேனி மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
10 நாட்களுக்கு முன் சிலர் உத்தரவை மீறி மீன்களை பிடிக்க முயன்றனர். போடி மீனவர் கூட்டுறவுசங்கத்தினர் தடுத்து நிறுத்தியும் மீன்களை பிடித்து தப்பினர். அங்கிருந்த வலை, மீன்களை பறிமுதல் செய்து தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்து புகார் செய்தனர். இந்நிலையில் அக்கண்மாயில் யாரும் அத்துமீறி மீன் பிடிக்காத வகையில் மீன்வளத்துறை மூலம் இரண்டு பேரும், போலீசார் இரண்டு பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE