புதுச்சேரி; உப்பளம் சாலையில், மக்கள் கூட்டத்தை கூட்டிய குஜராத் வியாபாரிக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.உப்பளம் அம்பேத்கர் சாலை, தேங்காய்த்திட்டு துறைமுகம் செல்லும் சாலை சந்திப்பில் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்நிலையில் நேற்று முன்தினம், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சிலர், ரூ. 150க்கு, படுக்கை விரிப்புகளை கூவி கூவி விற்பனை செய்தனர். இதனால், அப்பகுதியில் கும்பல் சேர்ந்தது. கொரோனா பரவல் சமயத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல், முக கவசம் அணியாமல் படுக்கை விரிப்புகளை விற்பனை செய்த, குஜராத் வியாபாரிகளுக்கு, புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் தலா ரூ. 500 அபராதம் விதித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE