ஸ்ரீமுஷ்ணம்; மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஸ்ரீமுஷ்ணத்தில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பேரூர் சாவடி, பாண்டியன் ஏரிக்கரை, முடிகண்ட நல்லுார் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். வெள்ள நிவாரண கணக்கெடுப்புகளை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுக்கா அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் வெற்றிவீரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் பங்கேற்று பேசினார். துணை தாசில்தாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். கரும்பு விவசாயிகள் சங்க மாநில குழு ஆதிமூலம், விவசாய சங்க வட்ட செயலாளர் விஜயகுமார், கிருஷ்ணமூர்த்தி, ராமு, தங்கசாமி, விஜயா, சந்தனமாலா, வேலு, குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE