விருத்தாசலம்; விருத்தாசலத்தில் மறைந்த தி.மு.க., மூத்த நிர்வாகிகள் வீடுகளுக்கு சென்ற உதயநிதி, அவர்களது படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.கடலுார் மேற்கு மாவட்டம், விருத்தாசலத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி, தி.மு.க., முன்னாள் அமைப்பு செயலாளர் செல்வராஜ் வீட்டிற்கு சென்று, அவரது படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார், உதயநிதிக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். குழந்தைதமிழரசன் மனைவி விஜி தமிழரசன், மகள் டாக்டர் சங்கவி முருகதாஸ், மருமகன் டாக்டர் முருகதாஸ் ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கினர்.இதேபோல், மூத்த நிர்வாகி மிசா கிருஷ்ணமூர்த்தி, மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி ஆகியோரது வீடுகளுக்கு சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்குமார், நகர செயலாளர் தண்டபாணி, இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் குரு சரஸ்வதி, மாணவரணி வழக்கறிஞர் அருள்குமார், மாவட்ட பிரதிநிதி பாண்டியன், நகர துணை செயலாளர் நம்பிராஜன், பொருளாளர் மணிகண்டன், உதயநிதி மன்ற பொருளாளர் இளையராஜா, இளங்கோவன், மதி உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE