புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் பகுதியில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் பகுதியில் மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில், புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர்கவிதா தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வில்லியநல்லுாரைச் சேர்ந்த ஆறுமுகம், ராமலிங்கம், தட்சணாமூர்த்தி மூவரும் மாட்டு வண்டியில் அனுமதியின்றி சவுடு மணல் கடத்தியது தெரிந்தது.புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து ஆறுமுகம்,66; ராமலிங்கம், 55; தட்சணா மூர்த்தி,49;ஆகியோரை கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE