புவனகிரி; புவனகிரி அருகே முன்விரோதத்தில் வாலிபரை திட்டி, தாக்கி இடது கை கட்டைவிரலை வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.புவனகிரி அருகே அழிச்சிக்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கும் அதே பகுதி கிருஷ்ணசாமிக்கும் முன்விரோதம் இருந்தது.நேற்று முன்தினம் மதியம் 1.00 மணிக்கு ராஜதுரை மகன் அரவிந்த் வீட்டில் இருந்தார். அங்கு சென்ற கிருஷ்ணசாமி மகன் மோகன், அரவிந்தை திட்டி, தாக்கி, அவரதுஇடது கை கட்டை விரலை வெட்டி விட்டு தப்பி ஓடினார். அருகிலிருந்தவர்கள் அரவிந்தை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவான மோகனை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE