மந்தாரக்குப்பம்; கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தில் பா.ம.க. வினர் மனு அளித்தனர்.தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் மற்றும் அனைத்து மக்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கெங்கைகொண்டான் பேரூராட்சியில் பா.ம.க., மாநில துணை பொதுச் செயலர் அசோக்குமார் மனு அளித்தார்.மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல், மாநில மகளிரணி செயலாளர் சிலம்புசெல்வி, மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்குமார், மாநில மாணவரணி சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர் பழனிவேல், பேரூர் செயலாளர் சக்திவேல், தலைவர் சக்திவேல், மாவட்ட துணைதலைவர் வெங்கடேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுதாகர், தனபாண்டியன், தமிழன்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE