மந்தாரக்குப்பம்; சேப்ளாநத்தம் தெற்கு ஊராட்சி மேற்கு காலனி கிராமத்தில் பழுதான மேல்நிலை குடிநீர் தொட்டியை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மந்தாரக்குப்பம் அடுத்த சேப்ளாநத்தம் தெற்கு ஊராட்சி மேற்கு காலனியில் 2,000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு 15 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.போதிய பராமரிப்பின்றி குடிநீர் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசிந்து வீணாகிறது. மேல்நிலை குடிநீர் தொட்டி நடுப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு சிமெண்ட் காரை பெயர்ந்துள்ளதால் அவ்வழியாக மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.பழுதான மேல்நிலை நீர்தேக்க தொட்டியை புனரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE