விருத்தாசலம்; கடலுார் மேற்கு மாவட்ட மற்றும் நகர தி.மு.க., சார்பில் விருத்தாசலத்தில், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ரமேஷ் எம்.பி., சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தனர். திறந்த வேனில் நின்றபடி, உதயநிதி பேசினார்.மாவட்ட துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் குருசரஸ்வதி, ஒன்றிய செயலாளர்கள் கனககோவிந்தசாமி, பாவாடைகோவிந்தசாமி, வேல்முருகன், பேரூர் செயலாளர் செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி, துணை அமைப்பாளர் கணேஷ்குமார், நகர அமைப்பாளர் பொன்கணேஷ், மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அருள்குமார், வழக்கறிஞரணி ரவிச்சந்திரன், ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராமு, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கதிரவன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தர்மமணிவேல், துணை அமைப்பாளர்கள் வசந்தகுமார், இளையராஜா, ஒன்றிய கவுன்சிலர் செல்வி சிவகண்டன் உட்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE