திட்டக்குடி; வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பா.ம.க., சார்பில் மனு கொடுத்தனர். திட்டக்குடி பஸ் நிலையத்தில் பா.ம.க., கொடியேற்றினர். பா.ம.க., மாநில துணை பொதுச் செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், துணைச் செயலாளர் கருணாநிதி, மாநில தேர்தல் பணிக் குழு தனபால், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஞானவேல், நகர செயலாளர் சுரேஷ், மங்களூர் ஒன்றிய செயலாளர்கள் நெப்போலியன், சரவணன், அங்கமுத்து, கோபி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE