விருத்தாசலம்; பஸ்சில் பயணம் செய்ய பெண்ணிடம் நாலரை சவரன் நகையைதிருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேவங்குடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி செங்கேணி, இவர் நேற்று அரியலுார் மாவட்டம் கருக்கையில் இருந்து விருத்தாசலத்திற்கு அரசு பஸ்சில் சென்றார்.விருத்தாசலம் பஸ் நிலையம் வந்தபோது, பையில் வைத்திருந்த பர்சை திறந்து பார்த்த போது, அதில் வைத்திருந்த நாலரை சவரன் செயினை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இது குறித்து செங்கேணி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE