பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே பூச்சி மருந்து குடித்து, பெண் இறந்தார்.பரங்கிப்பேட்டை அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்த கலாராணி, 45; இவரது மகள்பெரிய நாயகி, 27; இவருக்கும், பரங்கிப்பேட்டை ஆற்றங்கரை தெரு இளவரசனுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் நடந்தது.ஊரடங்கால், இளவரசனுக்கு, சரி வர வேலை கிடைக்காததால், இருவரும் வல்லம் கிராமத்தில்வந்து தங்கியிருந்தனர். இதனால் மனமுடைந்த பெரியநாயகி, கடந்த 18ம்தேதி பூச்சி மருந்து, குடித்து மயங்கி கிடந்தார். சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.இது குறித்து, பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப் பதிந்து, விசாரிக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE