சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே ஆரூர் கிராமத்தில் கிராம முதலீடு திட்ட ஒப்புதல் கூட்டம் நடந்தது.தமிழக ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சார்பில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்டச் செயல் அலுவலர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். நிறுவன மேம்பாட்டு திட்ட செயல் அலுவலர் பழனிசாமி, வி.ஏ.ஓ., கந்தசாமி முன்னிலை வகித்தனர். வட்டார அணித் தலைவர் ஏழுமலை வரவேற்றார்.கூட்டத்தில் மாவட்ட பகுப்பாய்வு அறிக்கை, ஊராட்சியில் உற்பத்தியாளர்கள், இளைஞர்கள் தொழில் முனைவோர் சமுதாய மக்கள் அமைப்பு குறித்து 7 நாட்கள் நடந்த நிகழ்ச்சி குறித்தும், ஊரக புத்தாக்க திட்ட கிராம முதலீடு திட்டத்தின் நோக்கம் குறித்தும் சாந்தி, சுபாஷினி பேசினர்.ஏற்பாடுகளை திட்ட செயலாளர் யாழினி செய்திருந்தார். ஊராட்சி செயலாளர் செல்லதுரை நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE