செஞ்சி; பள்ளிகுளம் கிராமத்தில் தி.மு.க., சார்பில் அ.தி.மு.க.,வை நிராகரிப்போம் கிராம சபை கூட்டம் நடந்தது.வல்லம் ஒன்றியம் பள்ளிகுளம் கிராமத்தில் வல்லம் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் அ.தி.மு.க.,வை நிராகரிப்போம் என்ற பெயரில் கிராம சபை கூட்டம் நடந்தது. மாநில தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் தமிழரசன் வரவேற்றார்.ஒன்றிய நிர்வாகிகள் துரைதிருநாவுக்கரசு, ராஜலிங்கம், மண்ணாங்கட்டி, ரவிச்சந்திரன், முன்னாள் தலைவர்கள் சரவணன், அன்புசெழியன், பன்னீர் செல்வம், இளைஞரணி அமைப்பாளர் அண்ணாமலை, துணை அமைப்பாளர் தியாகராஜன், நிர்வாகிகள் பெருமாள், சிவபெருமாள், காளிதாஸ், குமார், சூசை, துரை முருகன், ராஜேந்திரன், சின்ராஜி, வாசு ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் அ.தி.மு.க.,வை நிராகரிப்போம் என்ற பேனரில் அனைவரும் கையெழுத்திட்டு அ.தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE