உளுந்துார்பேட்டை; மனைவியை ஆபாசமாக திட்டி மிரட்டிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கடலுார் மாவட்டம், தட்டாஞ்சாவடியைச் சேர்ந்தவர் வசந்தன், 39; இவரது மனைவி பூங்கொடி, 38; சித்தா மருத்துவர். இருவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.பூங்கொடி, கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டையில் சித்தா மருத்துவம் பார்த்து வருகிறார். கடந்த 20ம் தேதி மாலை அங்கு சென்ற வசந்தன், பூங்கொடியை ஆபாசமாக திட்டி, மிரட்டினார்.பூங்கொடி நேற்று முன்தினம் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வசந்தன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE