எழுமலை : சேடபட்டி ஒன்றியம் எம். கல்லுப்பட்டியில் பா.ஜ.,வில் தி.மு.க.,உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் இணையும் விழா நடந்தது. மாவட்ட கலை, கலாசார பிரிவு அமைப்பாளர்தர்மராஜா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சுசீந்திரன் முன்னிலை வகித்தார். மாநில விவசாய அணி துணைத்தலைவர் முத்துராமன், கலை, கலாசார பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் கேசாரி, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் சாந்தகுமார், கர்ணன், மருதக்காளை, ஹரி கிருஷ்ணன், கவிதா, மொக்கராஜ், ஞானபழம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமர் மோடியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல உறுதிமொழி ஏற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE