திண்டிவனம்; திண்டிவனம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் மற்றும் திண்டிவனம் நண்பர்கள் அரிமா சங்கம் இணைந்து உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சியை நடத்தியது.திண்டிவனம் அருகே பாஞ்சாலம் ரோட்டில் அமைந்துள்ள குளூனி மறுவாழ்வு இல்லத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அரசு மருத்துவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். நம்பிக்கை மைய திட்ட இயக்குநர் ரவிராஜா எய்ட்ஸ் நோய் குறித்து உறுதி மொழி ஏற்றார். லேடீஸ் யுனைடெட் மையம் ஜெயஸ்ரீ, நம்பிக்கை மையம் பிரேமா ஆகியார் வாழ்த்தினர்.திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., கணேசன் எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நண்பர்கள் அரிமா சங்க செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர்கள் வெங்கடேசன், சைமன்துரைசிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE