விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில், டில்லியில் மத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் நடராஜன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிவகுரு துவக்கவுரையாற்றினார். மாவட்ட அமைப்புச் செயலாளர் அருணகிரி கண்டன உரையாற்றினார்.இதில், மத்திய அரசு வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர்.அப்போது, நிர்வாகிகள் குமரவேல், சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சிவனேசன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE