விழுப்புரம்; விழுப்புரம் அருகே பைக் விபத்தில் மகன் கண் எதிரே தாய் பரிதாபமாக இறந்தார்.உளுந்துார்பேட்டை தாலுகா, கீழ்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மகாதேவன், 28; இவர், கடந்த 22ம் தேதி தனது தாய் சந்திரா, 49; என்பவரை பைக்கில் அமரவைத்து, விழுப்புரத்தில் இருந்து திருவெண்ணெய்நல்லுார் நோக்கி சென்றார்.விழுப்புரம் அடுத்த எல்லீஸ்சத்திரம் சாலையில் சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத பைக், மகாதேவன் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த மகாதேவன், சந்திராவை அருகிலிருந்தவர்கள் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சந்திரா இறந்துவிட்டதாக கூறினர்.இது குறித்த புகாரின்பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE