ஆர்.கே.பேட்டை; ஏரி நீர்வரத்து கால்வாயை ஒட்டி அமைந்துள்ள பள்ளி வளாகத்திற்கு, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கொண்டாபுரம் கிராமத்தின் வடக்கு பகுதியில், அரசு துவக்க, மற்றும் உயர்நிலை பள்ளி, அங்கன்வாடி மையம் என, ஒருங்கிணைந்த வளாகம் உள்ளது.இந்த வளாகத்தின் தெற்கு பகுதியில் இருந்த பாழடைந்த வகுப்பறை கட்டடம், சில ஆண்டுகளுக்கு முன், இடித்து அகற்றப்பட்டது.அந்த கட்டடத்தை ஒட்டி, ஏரி நீர்வரத்து கால்வாய் உள்ளது. கட்டடம் இடிக்கப்பட்டதால், அந்த குறிப்பிட்ட பகுதியில், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாத நிலை உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE