கும்மிடிப்பூண்டி - கும்மிடிப்பூண்டி அருகே, கம்முவார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரவி-பிரமிளா தம்பதியரின் மகள் ஆர்.சினேகா. கடந்த கல்வி ஆண்டில், கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2, பயின்றார்.'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம், ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. இதையடுத்து, நேற்று, பள்ளி வளாகத்தில் அந்த மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் ரவி தலைமையில் நடந்த விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், பள்ளி ஆசிரியர்கள் சார்பில், 40 ஆயிரம் ஊக்கத்தொகை, ஒரு மடிக்கணினி வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், 25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டி கவுரவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE