கடம்பத்துார்- கடம்பத்துார் ஒன்றியத்தில், ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கடம்பத்துார் ஒன்றியம், தொடுகாடு ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருபவர் பெருமாள், 42. இவர், சில தினங்களுக்கு முன், ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, நாளிதழிலில் படத்துடன் பணி விபரத்துடன் விளம்பரம் கொடுத்திருந்தார்.இதுகுறித்து, கலெக்டர் பா.பொன்னையா சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விளக்கம் கேட்டார். இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் அளித்த விளக்கத்தின்படி, ஊராட்சி செயலர் பெருமாளை, பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.இதையடுத்து, கடம்பத்துார் ஒன்றிய அதிகாரிகள், நேற்று காலை, பெருமாளிடம் அதற்கான உத்தரவை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE