10 சவரன் நகை திருட்டுதிருவள்ளூர்: திருவள்ளூர், பெரியகுப்பம், பாரதி நகரைச் சேர்ந்தவர், மாணிக்கம் மகன் மாசிலாமணி, 48. இவர், நேற்று முன்தினம், வீட்டை பூட்டி கொண்டு குடும்பத்துடன், சேலை கிராமத்தில் தான் கட்டி வரும் வீட்டிற்கு சென்றார்.பின், மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் முன் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 10 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி கம்மல் திருடு போயிருந்தது தெரிந்தது.இதுகுறித்து, திருவள்ளூர் டவுன் போலீசில், மாசிலாமணி அளித்த புகாரையடுத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.முதியவர் மாயம்மப்பேடு: மப்பேடு அடுத்த, பண்ணுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 58, சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், 21ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின் வீடு திரும்பவில்லை.உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, மப்பேடு போலீசில், இவரது மனைவி பார்வதி அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE