திருத்தணி - நீர்வரத்து கால்வாயை கிராம மக்கள் பத்து நாட்களாக சீரமைத்ததால், இரண்டு ஏரிகள் நிரம்பி, மூன்றாவது ஏரிக்கு, உபரிநீர் செல்கிறது. ஏரிக்கு விவசாயிகள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.திருத்தணி ஒன்றியத்தில், தொடர் மழையால், செருக்கனுார் ஏரியும், முழு கொள்ளளவை எட்டி, அதன் உபரி நீர் கடைவாசல் வழியாக வெளியே சென்றது. இந்த ஏரியில் இருந்து, இ.என்.கண்டிகை ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் புதைந்திருந்தது.இதையடுத்து, கிராம மக்கள்,பத்து நாட்களாக களத்தில் இறங்கி நீர்வரத்து கால்வாயை சீரமைத்தனர். இதனால், செருக்கனுார் ஏரி உபரி நீர் இ.என்,கண்டிகை ஏரிக்கு சென்றதால், அந்த ஏரி நிரம்பின.பின், இந்த ஏரியின் உபரிநீர் தலையாறிதாங்கல் ஏரிக்கு சென்றது. அந்த ஏரியும், நேற்று முன்தினம் இரவு நிரம்பியது. அதை தொடர்ந்து, தலையாறிதாங்கல் ஏரியின் உபரி நீர் கடைவாசல் வழியாக வீரகநல்லுார் ஏரிக்கு நேற்று முதல் சென்றுக் கொண்டு இருக்கிறது.இதை அறிந்த வீரகநல்லுார் விவசாயிகள், இயற்கை தெய்வத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நீர்வரத்து கால்வாய், ஏரிக்கு சிறப்பு பூஜை செய்து, மலர் துாவி வழிபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE