கஞ்சா விற்ற மூவர் கைதுஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, அண்ணா நகர் பகுதியில், கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஊத்துக்கோட்டை போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சோதனைச்சாவடி அருகே, சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்குடன் இருந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர்களிடம், 1.600 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அவர்கள், ஊத்துக்கோட்டை, அண்ணா நகர் கிருஷ்ணமூர்த்தி, 22, மணவாள நகர் கவுதம், 29 என்பது தெரியவந்தது.இதேபோல், கன்னிகைப்பேர் கிராமத்தில் கஞ்சா விற்ற, அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன், 23, என்பவரை, பெரியபாளையம் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து, 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதுகுறித்து, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து மூன்று பேரையும் கைது செய்து, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.மூன்று டூ -- வீலர்கள் மீட்புஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், குஞ்சலம் காட்டுப் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் மூன்று பைக்குகள் இருப்பதாக, பென்னலுார்பேட்டை போலீசுக்கு தகவல் கிடைத்தது.போலீசார் அப்பகுதியில் சென்று சோதனை செய்தனர். அங்கு மறைவான இடத்தில் மூன்று பைக்குகள் இருப்பது தெரியவந்தது. பைக்குகளை போலீசார் கைப்பற்றி அதன் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE