திருப்போரூர் - திருப்போரூர் அருகே, ரவுடியை வெட்டிக்கொலை செய்த வழக்கில், சகோதரர்களான சிறுவன் உட்பட மூவரை, போலீசார், நேற்று கைது செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த மேலையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பழண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 40. ரவுடி.இவருக்கு மூன்று மனைவியர். இதில், இரண்டாவது மனைவி லட்சுமி, 4 வயது மகனுடன் வசித்து வந்தார்.இந்நிலையில், ரவுடி சதீஷ்குமார், நேற்று முன்தினம் காலை, மேலையூர் மயான பகுதியில், உடல் முழுதும் வெட்டுக்காயங்களுடன், எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.இது குறித்து, திருப்போரூர் போலீசார் விசாரித்தபோது, சதீஷ்குமாருடன் அடியாட்களாகவும், எடுபிடியாகவும் இருந்த சகோதரர்களான பிரசாந்த், 23, பரத், 20, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர், ரவுடியை கொலை செய்தது தெரிந்தது. இவர்கள் மூவரையும், போலீசார் கைது செய்தனர்.இது குறித்து, போலீசார் கூறியதாவதுதிருப்போரூர் அடுத்த, சிறுதாவூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் மற்றும் அவரது சகோதர்கள், நிலப்பிரச்னை தொடர்பாக, மூன்று மாதங்களுக்கு முன், ரவுடி சதீஷ்குமாரை சந்தித்துள்ளனர்.அவரும், உதவி செய்வதாக கூறி, மூவரையும் எடுபிடியாக வைத்துக்கொண்டார்.பின், பிரசாந்த், அவரது மனைவி, அம்மா மற்றும் சகோதரர்களை, தன் வீட்டு மாடியில், கொத்தடிமைகளாக, தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். மேலும், பிரசாந்த் மனைவியிடம், சதீஷ்குமார், அடிக்கடி பாலியல் சீண்டலும் செய்துள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த பிரசாந்த் மற்றும் சகோதரர்கள், சதீஷ்குமாரை தீர்த்துகட்ட முடிவு செய்தனர். அதன்படி, சதீஷ்குமார், அவரது தந்தையின் கல்லறைக்கு சென்று காரில் வந்தபோது, காரில் இருந்த மூவரும், கத்தியால் அவரை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE